10 மடங்கு மின்கட்டணம் வசூலிக்க உத்தரவு

by Staff / 03-02-2023 11:57:15am
10 மடங்கு மின்கட்டணம் வசூலிக்க உத்தரவு

அரசு நிலம் ஆக்கிரமிக்கப்படுவதை தடுக்க, ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பு நிலத்தில் வீட்டை காலி செய்யும்படி, ஆவடி தாசில்தாரர் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில், மேற்கூறிய கருத்தை அறிவுறுத்திய நீதிமன்றம், ஆக்கிரமிப்புகள் உள்ளதா என அளவீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஆவடி தாசில்தாருக்கு உத்தரவிட்டுள்ளது.

 

Tags :

Share via