வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 25 ஆயிரம் லட்டுகள்

by Editor / 08-01-2022 08:46:45pm
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கொரோனா விதிமுறைகளை பின்பற்றி 25 ஆயிரம் லட்டுகள்

தமிழகம் முழுவதும் பெருமாள் கோவில்களில் வரும் 13 ம் தேதி போகிப்பண்டிகை அன்று வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசியன்று  திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்குவது வழக்கம். இந்நிலையில் பக்தர்களுகு வழங்குவதற்காக  25 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி திருப்பூரில் மஹா விஷ்ணு சேவா சங்கம் சார்பில், திருப்பூர் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி நடைபெற்று வருகிறது. இங்கு தயார் செய்யப்படும் லட்டுகள் அவிநாசி, பெருமாநல்லூர், சேவூர், திருமுருகன்பூண்டி ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.

 

Tags :

Share via