லாரியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல்.

by Editor / 18-03-2024 09:57:38am
 லாரியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே தேர்தல் கண்காணிப்புக்குழு வாகன சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 51 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல் செய்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழ்நாடு பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடரி அருகே சேலம் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரு லாரியை நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி தாசில்தார் செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் நிறுத்தி லாரியை சோதனையிட்டபோது லாரியில் கணக்கில் வராத ரூபாய் 2 லட்சத்து 51 ஆயிரத்து 950 ரூபாய் பணம் இருந்தது.பணத்திற்கான ரசீது எதுவும் இல்லாததால் பணத்தை கைப்பற்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினர், கைப்பற்றப்பட்ட பணத்தை திட்டக்குடி கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

 

Tags :  லாரியில் 2 லட்சத்து 51 ஆயிரத்து 950 ரூபாய் பறிமுதல்

Share via