சீமான் மீதான வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்!

by Staff / 03-09-2024 12:06:34pm
சீமான் மீதான வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம்!

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான வழக்கை விசாரிக்க அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து, குறிப்பிட்ட சமூக பெயரை சுட்டிக்காட்டி பேசியதாக, தேசிய எஸ்.சி., எஸ்.டி. ஆணைய உத்தரவின் பேரில், சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக பட்டாபிராம் உதவி ஆணையர் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

 

Tags :

Share via