தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ. 5 கோடி வழங்க உத்தரவு

by Staff / 22-05-2024 05:10:05pm
தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு ரூ. 5 கோடி வழங்க உத்தரவு

நாகை மாவட்டம் நாகூர் பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் பொதுத்துறை நிறுவனமான சிபிசிஎல் சார்பில் கடற்கரையில் அமைக்கப்பட்டிருந்த கச்சா எண்ணெய்க் குழாயில் 2023ல் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் வெளியேறி கடல்நீரில் கலந்ததால், பொதுமக்களுக்கு கண் எரிச்சல், துர்நாற்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. இது குறித்து தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயம் விசாரணை மேற்கொண்ட நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு சிபிசிஎல் நிறுவனம் ரூ.5 கோடி அபராதமாக செலுத்த உத்தரவிட்டது.

 

Tags :

Share via