12 சந்தன மர கட்டைகளுடன் வாலிபர் கைது

by Staff / 30-03-2023 02:24:33pm
12 சந்தன மர கட்டைகளுடன் வாலிபர் கைது

கோவை சாய்பாபா காலனி போலீசார் மேட்டுப்பாளையம் ரோடு காமராஜர் வீதியில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக 3 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அதில் 2 வாலிபர்கள் போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிள் இருந்து இறங்கி தப்பி ஓடி விட்டனர்.மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை மட்டும் போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரது அவர் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தனர் அதில் 12 சந்தன மர துண்டுகள் இருந்தது இதனையடுத்து அந்த வாலிபரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கொம்ப நாயக்கன் பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து வயது 32 என்பது தெரியவந்தது தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் வடவள்ளி மடத்துக்குளம் மாரியம்மன் கோவில் அருகே இருந்து சந்தன மரங்களை வெட்டி துண்டுகளை கைப்பையில் போட்டு எடுத்து வந்ததாக கூறினார் தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்
போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிய விஜய் சசிகுமார் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

 

Tags :

Share via