மனைவியை தாக்கிய ஜிம் பயிற்சியாளர் கைது
கோவை தியாகராய நகரச் சேர்ந்தவர் கோபிநாத் (வயது 32) ஜிம் பயிற்சியாளர். இவரது மனைவி கார்த்தி (32). இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை.இந்த நிலையில் கோபிநாத்துக்கு உக்கடம் புல்லுக்காட்டைச் சேர்ந்த மகாலட்சுமி 21 என்ற இளம் பெண்ணுடன் கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனை கார்த்தி கண்டித்தார் இதன் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று கோபிநாத் தனது மனைவியிடம் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார் ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை இதனை எடுத்து கார்த்தி தனது கணவரின் செல்போனுக்கு தொடர்பு கொண்டார் ஆனால் அவர் செல்போனை எடுக்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த அவர் மகாலட்சுமியின் வீட்டிற்கு தனது கணவர் சென்று இருக்கலாம் என சந்தேகப்பட்டார் உடனடியாக கார்த்தி புல்லுக்காட்டில் உள்ள மகாலட்சுமி வீட்டிற்கு தனது கணவரை தேடி சென்றார். அப்போது வீட்டிற்குள் தனது கணவர் இருப்பதை பார்த்தார். அவரை கார்த்தி வீட்டிற்கு வருமாறு அழைத்தார் ஆனால் அவர் வர மறுத்து தனது மனைவியை தாக்கினார் அவருடன் சேர்ந்து மகாலட்சுமியும் கார்த்தியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீது கோவை அரசு ஆஸ்பத்திரில சேர்த்தனர் இதுகுறித்து பெரிய கடை வீதி போலீசார் வழக்கு பதிவு செய்து கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவரை அழைத்த இளம் பெண்ணை தாக்கிய அவரது கணவர் கோபிநாத் மற்றும் அவரது கள்ளக்காதலி மகாலட்சுமி ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர் பின்ன ரெண்டு பேரையும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
Tags :