அமரர் ஊர்தியில் மது விற்பனை

by Staff / 05-04-2023 01:15:08pm
அமரர் ஊர்தியில் மது விற்பனை

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகளுக்கும் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று விடுமுறை விடப்பட்டது. திருச்சி மாவட்டத்திலும் அனைத்து மதுக்கூடங்களை மூட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திருச்சி பொன்மலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான அமரர் ஊர்தியில் வைத்து கூடுதல் விலைக்கு மதுபானம் விற்கப்படுவதாக தகவல் வெளியானது. தகவலின் அடிப்படையில் போலீசார் அங்கு சென்றனர். போலீசை கண்டதும் மது விற்றவர் தப்பியோடினார். பின்னர் அமரர் ஊர்தியில் மறைத்து வைத்து விற்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடியவரை தேடிவருகின்றனர்

 

Tags :

Share via