சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்ற வாலிபர் கைது

by Staff / 08-04-2023 05:39:19pm
சாகும் வரை ஆயுள் தண்டனை பெற்ற வாலிபர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அண்ணலக்காரஷாரம் பகுதியை சேர்ந்தவர் தெய்வநாயகம் மகன் செண்பகமுத்து, 27, இவர் நேற்றுமுன்தினம் இரவு தனது நண்பர்களுடன், ஐந்து தலைப்பு பகுதியில் மது அருந்தியுள்ளார்.அப்போது, அவர்களுக்கு ஏற்பட்ட தகராறில், கும்பகோணம் மோதிலால் தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் வசந்தகுமார், 30, அஞ்சுகம் நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் தினேஷ், 28,. ஆகியோர் பாட்டில் மற்றும் செங்கல்லால் செண்பகமுத்துவை தாக்கியுள்ளனர்.இதில், அவருக்கு பின் தலை, காது பகுதிகளில் காயம் ஏற்பட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, கும்பகோணம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு சேர்ந்தனர். இது குறித்து தகவலறிந்த திருவிடைமருதுார் போலீசார், செண்பகமுத்துவிடம் விசாரணை நடத்தினர். இதில், வசந்தகுமார் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தப்பியோடிய தினேஷை தேடி வருகின்றனர்.போலீசார் கூறியதாவது; கும்பகோணத்தில், வடமாநில பெண் பாலியல் வழக்கில், தினேஷ், வசந்த்குமார் ஆகியோருக்கு, தஞ்சாவூர் மகளிா நீதிமன்றம் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்தது. இதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த நிலையில், விசாரணை முடியும் வரை சிறையில் இருந்து வெளிவந்தனர்.ஆனால், மேல் முறையீட்டு விசாரணையில், தஞ்சாவூர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இருப்பினும், வசந்தகுமார், தினேஷ் இருவரும் தலை மறைவாக இருந்தால் போலீசார் தேடி நிலையில், வசந்தகுமார் சிக்கியுள்ளார். தினேஷை தேடி வருகிறோம் என்றனர்.

 

Tags :

Share via