எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர் படகுடன் கைது
நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர் படகுடன் கைது செய்யப்பட்டார்.
கோடியக்கரைக்கு தென்கிழக்கே இந்திய எல்லையில் நுழைந்து மீன்பிடித்த இலங்கை யாழ்பாணம் வல்வெட்டித்துறை சேர்ந்த சாந்தரூபனை அவ்வழியில் ரோந்துபணி மேற்கொண்ட இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்து படகை பறிமுதல் செய்தனர்.
இலங்கையில் இருந்து படகில் வந்தவர் மீனவரா? அல்லது அகதியா? என இந்திய கடலோர காவல்படையினர்விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :