டெல்லியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற விஜய் வசந்த்

by Admin / 03-08-2021 03:33:57pm
டெல்லியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற விஜய் வசந்த்



பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளில் பேரணியாக பாராளுமன்றத்திற்கு சென்றனர்.

டெல்லியில் நடைபெற்ற சைக்கிள் பேரணியில் பங்கேற்ற விஜய் வசந்த்

பெகாசஸ் விவகாரம் உட்பட்ட பல்வேறு பிரச்சனைகளில் மத்திய அரசை எதிர்கொள்வதற்காக அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டத்திற்கு இன்று ராகுல் காந்தி அழைத்திருந்தார்.

 காலை சிற்றுண்டிக்கு பிறகு நடைபெற்ற  கூட்டத்தில் காங்கிரஸ், திமுக உட்பட 17 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டனர்.

 இந்தக் கூட்டத்தில் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தும் கலந்து கொண்டார். பின்னர் பெட்ரோல் டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து ராகுல் காந்தி தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளில் பேரணியாக பாராளுமன்றத்திற்கு சென்றனர். இந்தப் பேரணியில் விஜய் வசந்தும் கலந்துகொண்டார்.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள்.
நாட்டுக்காகவும் நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்காகவும் குரல் கொடுக்க எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டிய ராகுல் காந்திக்கு விஜய் வசந்த் நன்றி தெரிவித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via