கணவர் சம்மதிக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

by Staff / 12-04-2023 01:08:53pm
கணவர் சம்மதிக்காததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

சேலம் மாவட்டத்தில் பிரமிச்சு பாளையத்தைச் சேர்ந்தவர் சின்ட்ரல்லா. 21 வயதான இந்த இளம் பெண் சேலத்தைச் சேர்ந்த நவீன் குமார் என்ற கொத்தனாரை திருமணம் செய்திருக்கிறார். திருமணத்திற்கு பின்னர் சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார் சிண்ட்ரல்லா.திருமணம் ஆன இரண்டு வருடத்தில் சிண்ட்ரல்லாவுக்கு பெண் குழந்தை உள்ளது. வேலையின் காரணமாக குரோம்பேட்டையில் நண்பர்களுடன் தங்கி வேலைக்கு சென்று வந்த சிண்ட்ரல்லா, பின்னர் வேலை பார்த்து வரும் தனியார் நிறுவனத்தின் அருகிலேயே வீடு எடுத்து தங்கி வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். காலையில் வெகு நேரமாகியும் அவர் வீட்டின் கதவு திறக்காததால் அக்கம் பக்கத்தினர் சந்தேகம் அடைந்து உள்ளே சென்று பார்த்த போது தூக்கில் சடலமாக தொங்கி இருக்கிறார் சிண்ட்ரல்லா.தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் நேரில் வந்து சிண்ட்ரல்லா உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் போலீசார் நடத்திய முதல் முதற்கட்ட விசாரணையில் சேலத்தில் இருந்த கணவர் நவீன்குமாரை சென்னையில் தனிக்குடித்தனம் நடத்துவதற்காக அழைத்து இருக்கிறார். ஆனால் அதற்கு சம்மதிக்காமல் இருந்திருக்கிறார் நவீன்குமார். இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் சிண்ட்ரல்லா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிய வந்திருக்கிறது

 

Tags :

Share via