கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி

by Staff / 12-04-2023 12:22:40pm
கலாஷேத்ரா பேராசிரியர் ஹரிபத்மன் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை திருவான்மியூரில் செயல்பட்டு வரும் கலாஷேத்ரா நாட்டிய கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக புகார் எழுந்தது.இது தொடர்பாக முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார். புகாரின் பேரில், கல்லூரியின் உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அடையாறு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, கைது செய்தனர்.இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஹரிபத்மன் மனு தாக்கல் செய்தார். இந்த மனு சைதாப்பேட்டை 9 -வது நீதித்துறை நடுவர் மோகனாம்பாள் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags :

Share via