தலைமை ஆசிரியரை கீழே தள்ளி அடித்த தாளாளர்
மாணவர்கள் முன்னிலையில் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட கொடூரம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி, சுப்பன் தெருவில் உள்ள மகாராஜா அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி தாளாளர் அன்பா ஜெகன், வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் தலைமை ஆசிரியரை தாக்கினார். உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாக கூறி, தலைமை ஆசிரியரை பள்ளி தாளாளர் தாக்கும் வீடியோ வைரலானதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தாளாளர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :