விமானத்தின் மீது மோதிய பறவை.. உயிர் தப்பிய 160 பயணிகள்

by Staff / 25-05-2023 02:40:35pm
விமானத்தின் மீது மோதிய பறவை.. உயிர் தப்பிய 160 பயணிகள்

துபாய்க்கு பயணம் மேற்கொள்ள இருந்த இண்டிகோ விமானம் மங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் புறப்படும்போது பறவை மோதியது. இதையடுத்து, பயணிகள் இறக்கிவிடப்பட்டு, விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் இன்று காலை 8.30 மணியளவில் நடந்துள்ளது. 160 பயணிகளுடன் விமானம் டாக்சிவேயை கடக்கவிருந்த நிலையில், அதன் இறக்கைகளில் பறவை மோதியது. விமானி உடனடியாக ஏர் டிராபிக் கண்ட்ரோலுக்கு தகவல் தெரிவித்து, விமானம் புறப்படுவதை ரத்து செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் பெங்களூரு வழியாக துபாய் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.

 

Tags :

Share via