கேங்க்ஸ்டர் தலைவன் லாரன்ஸ் டெல்லி சிறைக்கு மாற்றம்

by Staff / 25-05-2023 02:28:06pm
கேங்க்ஸ்டர் தலைவன் லாரன்ஸ் டெல்லி சிறைக்கு மாற்றம்

பிரபல கேங்ஸ்டர் கும்பல் தலைவன் லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத் சிறையில் இருந்து டெல்லி மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். உயர் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பிஷ்னோய் மண்டோலி சிறைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நள்ளிரவு 12.30 மணியளவில் லாரன்ஸ் பிஷ்னோய் குஜராத்தில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார். அவர் மண்டோலி சிறையின் செல் எண் 15ல் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லி ரோகினி கோர்ட் துப்பாக்கிச்சூடு வழக்கில் முக்கிய குற்றவாளியான தில்லு தாஜ்பூரியா டெல்லி திகார் சிறையில் கொல்லப்பட்டதை அடுத்து பிஷ்னோய்யை சிறப்பு அறையில் வைக்க முடிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via