ஐநா சபையில் உரையாற்ற நெல்லை இளைஞர் தேர்வு
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை சேர்ந்த 24 வயது இளைஞரான அபிஷேக், வரும் ஜூலை 13-ம் தேதி சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐநா சபையின் 19-வது அமர்வில் உரையாற்ற தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலகளாவிய இந்த உயரிய மேடையில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் உரையாற்றவிருப்பது ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் பெருமை சேர்க்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. சர்வதேச பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில், முக்கிய கருத்துக்களை அவர் முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :



















