6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்.

by Editor / 05-09-2023 08:54:59am
6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்.

6 மாநிலங்களில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 7 மணிக்கு தொடங்கியது. உத்தரபிரதேசத்தில் கோசி, மேற்கு வங்கத்தில் துப்குரி, கேரளாவில் புதுப்பள்ளி, உத்தரகாண்டில் பாகேஷ்வர், ஜார்கண்டில் தும்ரி, திரிபுராவில் உள்ள போக்ஸாநகர் மற்றும் தன்பூர் ஆகிய தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. 7 தொகுதிகளின் எண்ணிக்கையும் செப்டம்பர் 8-ம் தேதி நடைபெறும். இந்தத் தொகுதிகள் அனைத்திலும் வாக்குப்பதிவு தொடங்கியது. துப்குரி, புதுப்பள்ளி, பாகேஷ்வர், தும்ரி, போக்சநகர் ஆகிய தொகுதியில் தேர்ந்த்தெடுக்கபட்ட எம்.எல்.ஏ.க்கள் இறந்ததாலும், கோசி மற்றும் தன்பூர் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாலும் இடைத்தேர்தல் நடக்கிறது.

 

Tags : 6 மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிக்கு  இடைத்தேர்தல் வாக்குப்பதிவு துவக்கம்.

Share via