கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டிதொகுதியில் இடைத்தேர்தல்..

by Editor / 05-09-2023 08:57:21am
கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டிதொகுதியில் இடைத்தேர்தல்..

கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மறைவை தொடர்ந்து, அவர் எம்எல்ஏ-வாக இருந்த கோட்டயம் புதுப்பள்ளி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். செப்டம்பர் 8-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இத்தொகுதியில் 1,76,417 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 182 வாக்குச் சாவடிகள் உள்ளன. 675 பேர் கொண்ட போலீசார் குழுவினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்தலில் போட்டியிட உம்மன் சாண்டியின் மகன் சாண்டி உம்மனுக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. 

 

Tags : கேரளா முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டிதொகுதியில் இடைத்தேர்தல்..

Share via