குடிப்பழக்கத்தால் மகனை சுட்டுக்கொன்ற காவலர்
ஆந்திர மாநிலத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தபோது பணம் கேட்டு தொல்லை செய்ததால் மகன் சேஷக்குமாரை காவலர் பிரசாத் துப்பாக்கியால் சுட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரசாத் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டிற்கு சம்பளப் பணம் தருவதில்லை எனக் கூறப்படுகிறது. பழைய EVM இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள குடோனில் பாதுகாப்புப் பணியில் இருந்த பிரசாத்திடம் மகன் சேஷக்குமார் வந்து ATM கார்டை கேட்டபோது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கையில் இருந்த துப்பாக்கியால் மகனை மார்பில் சுட்டுக் கொன்றார். பிரசாத்தை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :