நெல்லை மாநகர காவல் ஆணையராக சி.மகேஸ்வரி பொறுப்பேற்கிறார்.

by Editor / 27-10-2023 09:19:41am
நெல்லை மாநகர காவல் ஆணையராக சி.மகேஸ்வரி பொறுப்பேற்கிறார்.

நெல்லை மாநகர காவல் ஆணையராக சி.மகேஸ்வரி இன்று காலை 9.30 மணிக்கு பொறுப்பேற்கிறார்.கடந்த 2004ல் இ.கா.ப.தேர்வில் வெற்றி பெற்ற இவர் வேலூர்,சேலம் சரகங்களின் காவல்துறை துணை தலைவராக பணியாற்றிய நிலையில் காவல்துறை தலைவராக பதவி உயர்வு பெற்று சென்னை மாநகர போக்குவரத்து காவல் இணை ஆணையராகவும், சென்னை தமிழக காவல்துறை தலைவர் அலுவலக தலைமையிடத்து குற்றப்பிரிவு இணை ஆணையராகவும் பணியாற்றி வந்த நிலையில் தற்போது காவல்துறை தலைவர் (ஐஜி) அந்தஸ்தில் நெல்லை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்கிறார்

 

Tags : நெல்லை மாநகர காவல் ஆணையராக சி.மகேஸ்வரி

Share via