மதுபோதையில் பட்டா கத்தியுடன் ரகளை செய்த ரவுடி!

by Editor / 08-06-2021 10:07:20am
மதுபோதையில் பட்டா கத்தியுடன் ரகளை செய்த ரவுடி!

சிங்காநல்லூர் அடுத்த மசகாளிபாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் மதுபோதையில் பயங்கர ஆயுதங்களுடன் அவ்வப்போது தகராறு செய்தும், அங்கிருக்கும் வாகனங்களை சேதப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த மக்கள் மணிகண்டனின் அராஜகத்தை தட்டிக்கேட்டுள்ளனர். அப்போது, கற்களை கொண்டு கேட்டை உடைத்து மணிகண்டன் தாக்க முயற்சித்தார்.

அதனை வீடியோ எடுத்த இளைஞர் ஒருவர் போலீசுக்கு தகவல் அளிக்க உள்ளதாக எச்சரித்தார். இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அந்த இளைஞரின் வீட்டிற்கே சென்று பட்டாக்கத்தி கொண்டு தாக்க முற்பட்டார் .

அவர் தெருவில் நின்று தகராறில் ஈடுபட்டதால் , பயத்தில் பலரும் வீடுகளுக்குள் சென்றுவிட்டனர் . தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சிங்காநல்லூர் போலீசார் , மணிகண்டனை மடக்கிப்பிடித்து விசாரணை மேற்கொண்டனர் . அதில் , அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் , கடந்த 1 வாரமாக அவரது தாயாரை அடித்து துன்புறுத்தியதும் , தெருவில் உள்ளவர்களுடன் தகராறு செய்ததும் தெரிய வந்தது . இதனையடுத்து போலீசார் அவரை நீலாம்பூர் பகுதியில் உள்ள மனநல மருத்துவமமைனக்கு அனுப்பி வைத்தனர் .

 

Tags :

Share via