கலப்புத்திருமணம் செய்த பெண் மர்ம மரணம்

by Staff / 08-01-2024 02:42:29pm
கலப்புத்திருமணம் செய்த பெண் மர்ம மரணம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பூவாலூர் கிராமத்தை சேர்ந்த நவீன் மற்றும் ஐஸ்வர்யா ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், காதலித்து கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர். திருமணம் செய்தது பெற்றோருக்கு தெரியவந்ததையடுத்து ஐஸ்வர்யாவை ஊருக்கு அழைத்து வந்த நிலையில், கடந்த 3ம் தேதி ஐஸ்வர்யா இறந்துள்ளார். இதனையடுத்து யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை அவரது பெற்றோர் எரித்துள்ளனர். இந்த விஷயம் தற்போது வெளியே தெரியவர கிராம நிர்வாக அலுவலர் அளித்த புகாரில் இது ஆணவக்கொலையாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

 

Tags :

Share via