விஜயகாந்த் சிலை திறந்த அடுத்த நொடி வட்டமிட்ட கருடன்கள்

by Staff / 08-01-2024 03:10:03pm
விஜயகாந்த் சிலை திறந்த அடுத்த நொடி வட்டமிட்ட கருடன்கள்

தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்தின் மறைவையொட்டி, நேற்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சடங்கு செய்தனர். இதன் ஒரு பகுதியாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று தேமுதிக அவைத் தலைவர் இளங்கோவன் தலைமையில் சுமார் 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மொட்டை அடித்து கொண்டனர். அப்போது ஆற்றின் கரையோரத்தில் நடைபெற்ற ஈமச்சடங்கின் போது மூன்று கருடன்கள் வானில் வட்டமிட்டு வலம் வந்தன. அப்போது “கேப்டன் வாழ்க, கேப்டன் விஜயகாந்த் வாழ்க“ என கோஷமிட்டனர். தொடர்ந்து இளங்கோவனுக்கு சொந்தமான இடத்தில் விஜயகாந்தின் திருவுருவுச்சிலை திறந்து வைத்தனர். பின்பு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.

 

Tags :

Share via