கஞ்சா வேட்டை மூன்று நபர்கள் கைது. மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்.

by Editor / 07-04-2023 09:20:39pm
கஞ்சா வேட்டை மூன்று நபர்கள் கைது. மூன்று கிலோ கஞ்சா பறிமுதல்.

தென்காசி மாவட்டத்தில் கஞ்சா நடமாட்டத்தை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் உத்தரவின் பேரில் தனிப்படை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில் புளியங்குடி உட்கோட்டை தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் புளியங்குடி மரக்கடை தெரு பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரை பிடித்து விசாரித்ததில் அவர் கஞ்சா தனக்கு தரும் நபர் யார் என சொல்லிவிடுவதாகவும் தான் போன் செய்தால் கஞ்சாவை  கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.இதன் தொடர்ச்சியாக இன்று (07/04/2023) காலை லட்சுமணன் போன் செய்து சாகுல் ஹமீது என்பவரிடம் வழக்கம்போல் கஞ்சா கொண்டு வரவேண்டுமென  கூறியதன் பேரில் காத்திருந்த தனிப்படையினர் சாகுல் ஹமீதை சுற்றிவழித்து பிடித்து அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சாவை  பறிமுதல் செய்தனர், இதன் தொடர்ச்சியாக சாகுல் ஹமீதிடம் நடத்திய விசாரணையில்  அவர் கொடுத்த தகவலின் பெயரில் தொடர்ச்சியாக புளியங்குடி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் மற்றும் வாசுதேவநல்லூரை சேர்ந்த கண்ணன் ஆகிய 02 நபர்களிடமிருந்து 02 கிலோ கஞ்சாவை போலீசார்  பறிமுதல் செய்தனர்.மேலும் மேற்படி சாகுல் அமீது, ராஜ்குமார் மற்றும் கண்ணன் ஆகிய 03 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிட மிருந்து 03 கிலோ கஞ்சாவை போலீசார் கைது  பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via