நினைவாற்றலால் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்டில் இடம்பிடித்த சிறுவன்

by Editor / 19-10-2021 05:15:23pm
நினைவாற்றலால் இந்தியன் புக் ஆஃப்  ரெக்கார்ட்டில் இடம்பிடித்த  சிறுவன்

தூத்துக்குடி பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் சங்கர் ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இந்த தம்பதிக்கு சார்விக் சரண் (6) என்ற மகன் உள்ளார். மூன்று வயது முதல் மழலையர் பள்ளியில் படித்து வந்த இந்த சிறுவன் சார்விக் சரணை அவனது பெற்றோர் 1ஆம் வகுப்பில் சேர்த்துள்ளனர். ஆனால் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காத சூழலில் ஆன்லைன் மூலமாக படித்து வந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து சிறுவனின் தாயார் மாரீஸ்வரி, அவருக்கு அனைத்து நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் பெயர்களை சொல்லிக் கொடுத்துள்ளார்.இதை மனதில் வைத்துக் கொண்ட சிறுவன் அனைவரின் பெயர்களையும் எப்போது கேட்டாலும் சொல்லுமளவுக்கு நினைவாற்றலில் சிறந்து விளங்க ஆரம்பித்தார்.

அதுமட்டுமின்றி கந்த சஷ்டி கவசம், மாநிலங்களின் தலைநகர் பெயர்களையும், அறிவியல் பெயர்கள் என அனைத்தையும் சரளமாக கூறும் சார்விக் சரண் நினைவாற்றலை பாராட்டி 'இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' குழுமம் கேடயம், பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது.'கலாம் வேர்ல்டு ரெக்கார்டு' குழுவினரும் சிறுவனின் சாதனையை பதிவு செய்து, அதிக நினைவாற்றல் உள்ள சிறுவன் என்ற சான்றிதழையும் வழங்கியுள்ளனர்..

 

Tags :

Share via