பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு  விழாவில், தமிழக முதலமைச்சா்  மு.க. ஸ்டாலின்

by Admin / 28-10-2025 05:28:29am
பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு  விழாவில், தமிழக முதலமைச்சா்  மு.க. ஸ்டாலின்

சென்னை, மியூசிக் அகாடமியில் நடைபெற்ற பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு  விழாவில், தமிழக முதலமைச்சா்  மு.க. ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கனவுகளும் கடின உழைப்பும்:  கண்களில் கனவுடனும், இதயத்தில்  லட்சியத்துடனும் பட்டம் பெற்ற மாணவர்களுக்குப்  பாராட்டு  தெரிவித்த முதலமைச்சா் மாணவர்கள்  பெரிய கனவுகளைக் காண வேண்டும், கடினமாக  உழைக்க வேண்டும், அதே நேரத்தில் கனிவாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும் என்றும் நேர்மை, நம்பிக்கை, பொறுப்புணர்வு போன்ற நற்பண்புகளுடன் தங்கள் தொழில் பாதையில் பயணிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த பண்புகள்தான் வாழ்க்கையில் வெற்றிக்கான  அடித்தளத்தை அமைக்கும் என்றும் அன்றைய காலகட்டத்தில் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்கள் இன்று உயர் கல்வி பெறுவதற்குத் திராவிட இயக்கமே காரணம்  என்றும்.உயர்கல்வியில் தமிழ்நாடு: உயர்கல்வி சேர்க்கை விகிதம் மற்றும் NIRF (தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு) தரவரிசைகளில் தமிழ்நாடு சிறப்பாகச் செயல்படுவதை மாணவர்களுக்கு அவர் சுட்டிக்காட்டிதோடு  பட்டம் என்பது வெறும் காகிதம் அல்ல, அது கடின உழைப்புக்கான அங்கீகாரம். அதை மனிதாபிமானத்துடன் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்...அவர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு: ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக, முதல்வரின் ஆராய்ச்சி இன்குபேஷன் தொகுப்பையும் வெளியிட்டார்..இவ் விழாவில் மொத்தம் 197 மாணவர்கள் பட்டம் பெற்றனர். இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைவர் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். 

பாரதிதாசன் மேலாண்மை கல்வி நிறுவனத்தின் 33-வது பட்டமளிப்பு  விழாவில், தமிழக முதலமைச்சா்  மு.க. ஸ்டாலின்
 

Tags :

Share via