பத்து ஆண்டுகளில் இலங்கைக்கு 1850 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் ஜெய்சங்கர்

by Editor / 23-07-2022 01:34:59pm
பத்து ஆண்டுகளில் இலங்கைக்கு  1850 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது அமைச்சர் ஜெய்சங்கர்

பத்து ஆண்டுகளில் இலங்கைக்கு 8 தவணையாக ஆயிரத்து 850 மில்லியன் டாலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார். ரயில்வே உட்கட்டமைப்பு பாதுகாப்பு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி எரிபொருள் மற்றும் உரம் உள்ளிட்ட துறைகளில் மேம்படுத்தும் கடனுதவி வழங்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். நிதி நெருக்கடியில்  சிக்கியபோது எரிவாய்வு மருந்து எரிபொருள் 3.8 பில்லியன் டாலர் கடன் இலங்கைக்கு வழங்கப்பட்டதாகவும் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை அடிப்படையில் உதவி வழங்கப்பட்டதாகவும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via