குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 கன்னி ராசியிலிருந்து தனுசு ராசி வரை

by Admin / 19-04-2023 01:38:52am
குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 கன்னி ராசியிலிருந்து தனுசு ராசி வரை

 கன்னி ராசி அன்பர்களே!
குரு அஷ்டம ஸ்தானத்தில் நிற்பதால் ,தூரத்து உறவினர்களிடம் ஆதரவான சூழல் ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகளின் மூலம் மனதில் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். சுபகாரிய செயல்களில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். வழக்கு சார்ந்த செயல்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான தடுமாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும்.
பலன்கள்: 

குரு ஐந்தாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் சிந்தனைகளில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். ஆன்மிகத்தில் ஈடுபாடுகளும், விரயங்களும் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் அலைச்சல்கள் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் தனவருவாய் மற்றும் பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியம் சார்ந்த சிக்கல்கள் குறையும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகங்களின் மூலம் மாற்றமும், மகிழ்ச்சியும் பிறக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் வாகன மாற்றம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். பயணங்கள் சார்ந்த விஷயங்கள் ஈடேறும். சிந்தனையின் போக்கில் புதுமைகள் பிறக்கும்.
 

கடன் சார்ந்த நெருக்கடிகள் குறைவதற்கான வாய்ப்புகள் அமையும். வாக்கு சாதுரியத்தின் மூலம் வரவுகளை மேம்படுத்திக் கொள்வீர்கள். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
 

ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். நெருக்கமானவர்களிடம் மனம் விட்டு பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். வாகன பயணத்தில் விவேகம் வேண்டும். எதிர்பாராத திடீர் மருத்துவ செலவுகளால் சேமிப்பு குறையும்.
 

பெண்களுக்கு குடும்பத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். பிடித்த உடைகள் மற்றும் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அவ்வப்போது மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
 

மாணவர்கள் உயர்கல்வியில் நல்ல ஆலோசனை பெற்று முடிவு எடுப்பது நல்லது. சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சில வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். புதிய நபர்களிடம் கவனம் வேண்டும். விதண்டாவாத பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். விருப்பமான சில துறைகள் கிடைக்க படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 
 

உத்தியோகஸ்தர்களுக்கு அரசு பணிகளில் மறைமுக ஆதாயம் உண்டாகும். மற்றவரின் செயல்பாடுகளில் தலையிடுவதை குறைத்துக் கொள்ளவும். புதிய வேலை நிமிர்த்தமான முயற்சிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடிகள் ஏற்படும்.
 

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் கைகூடும். நறுமணப் பொருட்கள் சார்ந்த விஷயங்களில் லாபம் மேம்படும். விவசாயம் மற்றும் உணவு சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். ஒப்பந்த பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். கால்நடைகள் சார்ந்த வியாபாரத்தில் லாபம் ஏற்படும். 
 

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொருளாதார சிக்கல்கள் குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவதற்கான உதவிகள் சாதகமாகும். வாழ்க்கைத் துணை வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.
 

சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் நிதானமாக செயல்படவும். கட்சி நிமிர்த்தமாக எதிர்பார்த்திருந்த சில புதிய பொறுப்புகள் கிடைக்கும். கூட்டாளிகள் ஆதரவாக இருப்பார்கள். உங்கள் மீது இருந்த சிறு சிறு வதந்திகள் மறையும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும்.
 

அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் சுதந்திரத்தன்மையுடனும், குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுடனும், மாற்றமான சிந்தனைகளுடனும் செயல்படுவீர்கள்.
 

அஷ்டம ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் ஆர்வமின்மையும், எண்ணிய சில பணிகள் நடைபெறுவதில் தாமதமும், புதிய அனுபவமும் பிறக்கும்.
 

வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.

பாதுகாப்பு வீரர்களுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கி தருவதன் மூலம் சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். 
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 


துலாம் ராசி- குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

 துலாம் ராசிக்கு ஆறாம் இடமான சத்ரு ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.
 

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியானலாப ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக துலாம் ராசியானராசி ஸ்தானத்தையும்,ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான
சகோதர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.அனைவரையும் சமமாக கருதும் துலாம் ராசி அன்பர்களே!!
குரு களத்திர ஸ்தானத்தில் இருப்பதால் மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். வித்தியாசமான அணுகுமுறைகளின் மூலம் மாற்றம் ஏற்படும்.
 

குரு ஐந்தாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் தனவரவு மேம்படும். வழக்கு சார்ந்த பணிகளில் வெற்றி கிடைக்கும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பொன், பொருள் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.

குரு ஏழாம் பார்வையாக ஜென்ம ராசியை பார்ப்பதால் குணநலன்களில் மாற்றம் ஏற்படும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உடன் இருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

குரு ஒன்பதாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். மனை விருத்தி தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாகன பயணங்களின் மூலம் திருப்திகரமான சூழல் அமையும். நிதானமான செயல்பாடுகளின் மூலம் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
 

பொருளாதாரத்தில் இருந்துவந்த நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். எதிர்பாராத சில திடீர் வாய்ப்புகளால் வரவுகள் மேம்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருமானம் மேம்படும். செய்கின்ற முயற்சிக்கு ஏற்ப சேமிப்புகள் அதிகரிக்கும்.
:

உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் மறையும். பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். முழங்கால் மற்றும் காது தொடர்பான பிரச்சனைகள் உண்டாகும்.
 

மனதில் எண்ணியவை நிறைவேறும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். தனிப்பட்ட மற்றும் குடும்ப விஷயங்களை நண்பர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் அனுசரித்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலகி சென்றவர்களை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும்.
 

மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். தகவல் தொடர்புத் துறை சார்ந்த கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும்.
 

உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் உணர்ச்சிவசமான பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிலருக்கு புதிய பதவிகள் கிடைக்கும். புதிய பயிற்சிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். உபரி வருமானத்திற்கான எண்ணங்கள் மேம்படும். நெருக்கடியான கடன் சார்ந்த பிரச்சனைகள் நீங்கும்.
 

தொழில் நிமிர்த்தமான புதிய முதலீடுகள் அதிகரிக்கும். செய்யும் முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வாசனை திரவியம் சார்ந்த வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். கட்டுமான பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். பங்குச்சந்தை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும்.
 

கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். எழுத்துக்களின் மூலம் பலரின் மனதினை வெற்றி கொள்வீர்கள். பின்னணி இசை மற்றும் குரல் சார்ந்த துறைகளில் அனுகூலமான சூழல் உண்டாகும். தற்காப்பு கலைகள் மீதான ஈடுபாடுகள் அதிகரிக்கும்.
 

கட்சி நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், ஆதரவும் மேம்படும். புதிய முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழல் உண்டாகும். உயர்பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும்.
 

களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் மனதில் புதுவிதமான எண்ணங்களும், எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கையும், செல்வாக்கை மேம்படுத்தி கொள்வதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.
 

களத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வதும், புதிய நபர்களின் தன்மைகளை அறிந்து நட்பு கொள்வதும் மேன்மையை உருவாக்கும்.
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அண்ணாமலையாரை வணங்கி வர வாழ்க்கையில் புதிய அத்தியாயம் பிறக்கும்.ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கும், கலை சார்ந்த துறைகளில் உள்ள மூத்த கலைஞர்களுக்கும் உதவுவதன் மூலம் மனதில் தெளிவும், புத்துணர்ச்சியும் உண்டாகும். 
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 

விருச்சிகம் ராசி 
குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024
ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சத்ரு ஸ்தானமான ஆறாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.
 

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியானதொழில் ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக துலாம் ராசியானபோக ஸ்தானத்தையும்,ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான
குடும்ப ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
 விருச்சிக ராசி அன்பர்களே !!குரு சத்ரு ஸ்தானத்தில் இருப்பதால் குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சுபகாரியங்கள் நடைபெறும். வழக்கு சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மையின்றி செயல்பட கற்றுக் கொள்ளவும்.
 குரு ஐந்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் சொந்த ஊர் செல்வது தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உங்களது நேர்மைக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். அடுத்து என்ன செய்வது என்பது குறித்து தெளிவான புரிதல் உண்டாகும்.

குரு ஏழாம் பார்வையாக போக ஸ்தானத்தை பார்ப்பதால் சுபகாரிய செலவுகள் அதிகரிக்கும். தேவையற்ற விவாதங்களால் பகைமை ஏற்படலாம். வாக்குறுதி அளிக்கும் போது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை அறிந்து கொள்வதை குறைத்துக் கொள்வது நல்லது.

குரு ஒன்பதாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் உலக நடைமுறைகளைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அரசு விதிகளுக்கு உட்பட்டு நடப்பது தேவையற்ற விரயத்தை குறைக்கும். கொள்கைப் பிடிப்பு குணம் அதிகரிக்கும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும்.
:

பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். விருப்பமான பொருட்களை தேவை இருப்பின் மட்டும் வாங்கிக் கொள்ளவும். ஆடம்பர எண்ணங்களால் நெருக்கடிகள் ஏற்படும்.
:

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பதில் ஆர்வமின்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் தேவையில்லாத அலைச்சல்கள் ஏற்படும்.
பெண்கள் பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்த சுபகாரியங்கள் நடைபெறுவதில் காலதாமதம் உண்டாகும். குடும்ப விஷயங்களை ரகசியமாக வைத்துக் கொள்ளவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும்.
மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வமின்மை உண்டாகும். பாடங்களை ஒன்றுக்கு இரண்டு முறை படிப்பது நல்லது. பெரியோர்களிடம் விதண்டாவாதங்களை குறைத்துக் கொள்ளவும். உயர்நிலை கல்வியில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் வெளியூர் சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சிலருக்கு கைகூடும்.
உத்தியோக பணிகளில் எதிர்பார்ப்பின்றி செயல்படுவது மனதிற்கு அமைதியை கொடுக்கும். புதிய வேலைகள் அமைந்தாலும் நெருக்கடியான சூழ்நிலைகள் குறையாது. எதிர்பார்த்த ஊதிய உயர்வுகள் தாமதமாக கிடைக்கும். 
 

வியாபாரப் பணிகளில் சந்தை நிலவரங்களை அறிந்து புதிய முதலீடுகளை மேற்கொள்ளவும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். மறைமுகமான சில போட்டிகளால் லாபம் குறையும். புதிய நவீன கருவிகளால் விரயங்கள் அதிகரிக்கும். கால்நடை வியாபாரத்தில் மத்திமமான லாபம் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும்.
கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான வாய்ப்புகளில் கவனம் வேண்டும். இனம்புரியாத சில குழப்பங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். எதிலும் போட்டிகள் அதிகமாக இருக்கும்.
சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு ஒரு புதிய பாதை புலப்படும். பத்திரிக்கை துறைகளில் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து செயல்படுவதன் மூலம் நன்மை உண்டாகும்.
:

சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் நெருக்கமானவர்களை பற்றிய புரிதலும், தொழில் வியாபாரத்தில் புதிய பரிணாமத்தையும், வரவுகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும்.
:சத்ரு ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் சிக்கனத்துடன் செயல்படவும். கணவன், மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும்.
:திருச்செந்தூர் முருகரை வழிபாடு செய்துவர குடும்பத்தில் ஆதரவான சூழ்நிலைகள் உண்டாகும்.

மலைப்பகுதிகளில் மரங்களை நடுவதும், பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடிய மரங்களை பராமரிப்பதும் பணிகளில் இருக்கக்கூடிய தடைகளை குறைக்கும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 


தனுசு ராசி -குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

 தனுசு ராசிக்கு சுக ஸ்தானமான நான்காம் இடத்தில் இருந்துவந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு புத்திர ஸ்தானமான ஐந்தாம் இடத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.
 

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியானபாக்கிய ஸ்தானத்தையும்,ஏழாம் பார்வையாக துலாம் ராசியானலாப ஸ்தானத்தையும்,ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான
ஜென்ம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
 தனுசு ராசி அன்பர்களே!!
குரு புத்திர ஸ்தானத்தில் இருப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கலைத்துறையில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதுமையான சில சிந்தனைகளின் மூலம் சம்பாதிக்கும் வழிகளை அறிவீர்கள். பந்தயம் சார்ந்த செயல்களை தவிர்ப்பது நல்லது. உடன் இருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். விருந்து, கேளிக்கைகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள்.
 

குரு ஐந்தாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் கலை நுட்பமான விஷயங்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மடம் சார்ந்த பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் நினைத்த ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

குரு ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவதற்கான தருணங்கள் உண்டாகும். புத்திசாலித்தனமான செயல்பாடுகளின் மூலம் ஆசைகளை நிறைவேற்றி கொள்வீர்கள். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான எண்ணங்கள் ஈடேறும். மூத்த சகோதரர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதால் எந்தவொரு செயலையும் முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும்.
பொருளாதாரத்தில் சுபிட்சமான நிலை உண்டாகும். கடன் சார்ந்த இன்னல்களுக்கு முடிவுகள் கிடைக்கும். சொந்த பூமியில் மனை வாங்கக்கூடிய வாய்ப்புகள் சிலருக்கு உண்டாகும். பூர்வீக சொத்துக்களில் சற்று சிந்தித்து முடிவு எடுக்கவும். தனவருவாய் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். 
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதளவில் புதிய தெளிவுடன் காணப்படுவீர்கள். சிந்தனையில் தெளிவும், புத்துணர்ச்சியும் வெளிப்படும். பசியின்மை சார்ந்த இன்னல்கள் குறையும். செயல்பாடுகளில் ஞாபகமறதி ஏற்பட்டு நீங்கும்.
:

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமையும், மகிழ்ச்சியும் உண்டாகும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகைகள் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தந்தை வழியில் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். இறை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சுபகாரியத்தில் இருந்துவந்த தடைகள் விலகும். பொன், பொருட்கள் சேர்க்கை உண்டாகும்.
ஆசிரியர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான தேடல்கள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் ஈடுபாடுகள் ஏற்படும். தொழில்நுட்ப கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு சென்று படிப்பதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். போட்டித் தேர்வுகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கும்.
உத்தியோக பணிகளில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பங்கு வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் முயற்சிக்கு ஏற்ற லாபங்களை அடைவீர்கள். ஆசிரியர் பணியில் சாதகமற்ற சூழல் ஏற்பட்டு நீங்கும். மருத்துவ பணிகளில் மதிப்புகள் அதிகரிக்கும். சட்டம் சார்ந்த பணிகளில் இருப்பவர்கள் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள்.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் லாபகரமான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். கூட்டாளிகளின் அறிமுகம் மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். தொழில் ரீதியான அரசு உதவிகள் சாதகமாகும். புதிய வாடிக்கையாளர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். 
:கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளியூர் அல்லது வெளிநாட்டிற்கு சென்று நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சூழல் அமையும். மறைமுகமான திறமைகளை வெளிப்படுத்தி வாய்ப்புகளை பெறுவீர்கள். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் மீது ஈடுபாடு அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாகும். 
கட்சி பணிகளில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும். வெளி நபர்களின் மறைமுக ஆதரவின் மூலம் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களின் மூலம் செல்வாக்குகள் அதிகரிக்கும். 
புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் வெளிவட்டாரங்களில் செல்வாக்குகள் மேம்படும். நீண்ட நாட்களாக தடைபட்ட சில ஆசைகள் நிறைவேறும். உடல் தோற்றத்தில் புதிய மாற்றம் ஏற்படும்.
புத்திர ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் ஆடம்பரமான சிந்தனைகள் மேம்படும். இனம்புரியாத கற்பனையால் அவ்வப்போது ஒருவிதமான சோர்வு ஏற்படும். எங்கும் தற்பெருமை இன்றி செயல்படவும்.
அர்த்தநாரீஸ்வரரை வழிபாடு செய்துவர செய்யும் செயல்களில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.வயதான ஆன்மிக பெரியோர்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
மேற்கூறப்பட்டுள்ள பலன்கள் யாவும் பொதுபலன்களே..!! அவரவர்களின் திசாபுத்திக்கு ஏற்ப பலன்களில் மாற்றம் உண்டாகும்.

 


 

 

Tags :

Share via