குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 மேஷம் ராசியிலிருந்து  சிம்மம் ராசி வரை

by Admin / 19-04-2023 01:22:47am
 குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024 மேஷம்  ராசியிலிருந்து  சிம்மம் ராசி வரை

மேஷம் ராசி- குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

மேஷ ராசிக்கு பனிரெண்டாம் இடமான போக ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்குருவானவர் தான் நின்ற  ராசியிலிருந்து ,ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான புத்திர ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையாக  துலாம் ராசியானகளத்திரஸ்தானத்தையும்,ஒன்பதாம்  பார்வையாக தனுசு ராசியான பாக்கிய  ஸ்தானத்தையும்  பார்வையிட  இருக்கின்றார் மேஷ ராசி அன்பர்களே குரு ஜென்ம ராசியில்  நிற்பதால்  எதிர்பார்த்த  சில  முடிவுகள்  கிடைப்பதில்  அலைச்சல்கள்  ஏற்படும்.  ஆடம்பர சிந்தனைகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். குழந்தைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும்.எதிலும்  ஆர்வமின்றி  செயல்படுவீர்கள். வித்தியாசமான கனவுகளினால் அடிக்கடி குழப்பங்கள் உண்டாகும்.

குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் திருமணமான தம்பதிகளுக்கு மனம் மகிழும் படியான செய்திகள் கிடைக்கும். சகோதரர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இழுபறியாக இருந்துவந்த பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் தொழில் கூட்டாளிகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த காரியங்கள் நிறைவு பெறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கங்கள் அதிகரிக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றம் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதினால் திருத்தல மற்றும் தர்ம காரியங்களில் ஈடுபட்டு செல்வாக்கு அடைவீர்கள். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் புதிய தெளிவுகள் பிறக்கும். நிர்வாக பணிகளில் மேன்மை உண்டாகும். பூர்வீக தொழில்களில் முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும்.
புதுமையான சில சிந்தனைகளின் மூலம் வரவுகளை மேம்படுத்துவீர்கள். வர்த்தக பணிகளில் மேன்மை உண்டாகும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வீடு மற்றும் வாகன பராமரிப்பு சார்ந்த செலவுகள் ஏற்படும்.
உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். தூக்கமின்மையால் அடிக்கடி சோர்வும், கோபமும் ஏற்படும். சில நேரங்களில் அலர்ஜி தொடர்பான இன்னல்கள் ஏற்பட்டு நீங்கும்.
பெண்கள் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பெற்றோர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உயர்கல்வியில் இருந்த குழப்பங்கள் குறையும். விருப்பமான சில விஷயங்கள் கைகூடும். வழக்கு சார்ந்த செயல்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனதில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் கிடைப்பதில் இருந்த தடைகள் குறையும்.
மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். உற்சாகமான சிந்தனைகள் மனதளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளால் மனதில் குழப்பம் ஏற்படும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றியும், பாராட்டும் பெறுவீர்கள்.
:புதிய வேலை தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் உண்டாகும். சில நேரங்களில் தனிமையை விரும்புவீர்கள். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்லவும். எதிர்பார்த்த சில சலுகைகள் தாமதமாக கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிலருக்கு இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும்.
புதிய தொழில் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். வியாபார பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். விவசாய பணிகளில் உற்பத்தி அதிகரிக்கும்.
கலை சார்ந்த துறைகளில் வரவுகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். புதிய துறைகளில் உள்ள நுட்பங்களை கற்றுக் கொள்வீர்கள். பாதியில் நின்றுபோன பணிகளை செய்து முடிப்பீர்கள். சக கலைஞர்களிடம் அனுசரித்து செல்வதால் முன்னேற்றமான பலன்கள் கிடைக்கும். பேச்சுக்களால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். ஒப்பந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும்.
அரசியல்வாதிகள் உட்கட்சி விவகாரங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுப்பது நல்லது. செல்வாக்கை மேம்படுத்தி கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். உயர் அதிகாரிகளிடத்தில் தேவையற்ற பகைமை உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும்.

ஜென்ம ராசியில் குரு சஞ்சாரம் செய்வதினால் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தந்தையிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும்.கவனம்:

ஜென்மத்தில் குரு சஞ்சாரம் செய்து கொண்டிருப்பதால் திடீரென முடிவு எடுப்பதை தவிர்க்கவும். எதிலும் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது.
திருவண்ணாமலையில் வீற்றிருக்கும் அருணாச்சலேஸ்வரரை வணங்கி வர சிந்தனையில் தெளிவும், உதவியும் கிடைக்கப் பெறுவீர்கள்.ஏழை மாணவர்களுக்கு பாட புத்தகங்களை வாங்கிக் கொடுப்பதனால் நிம்மதி உண்டாகும்.
 

 

ரிஷபம் ராசி- குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

 ரிஷப ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பனிரெண்டாம் இடமான போக ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து,ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியானசுக ஸ்தானத்தையும்,

ஏழாம் பார்வையாக துலாம் ராசியானசத்ரு ஸ்தானத்தையும்,ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியானஅஷ்டம ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார்.
 ரிஷப ராசி அன்பர்களே!
குரு போக ஸ்தானத்தில் நிற்பதால் சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். முன்கோபத்தினால் சிறு சிறு வாய்ப்புகளையும் தவறவிடுவீர்கள். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆசைகளைக் குறைத்துக் கொண்டு கிடைக்கும் சிறு சிறு காரியங்களில் மகிழ்ச்சி அடைவது நல்லது. சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மேன்மையை ஏற்படுத்தும். மனநிலையில் திடீர் மாற்றங்கள் பிறக்கும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும்.
குரு தன்னுடைய ஐந்தாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதினால் வருமானத்தை மேம்படுத்துவதற்கான எண்ணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். மனதில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். 

குரு தன்னுடைய ஏழாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதினால் கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். வேலை சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வழக்குகளில் சமரசத் தீர்வு கிடைக்கும். தேவையற்ற வீண் விவாதங்களை தவிர்க்கவும். மற்றவர்களை பற்றிய விமர்சன கருத்துக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான செலவுகளை குறைத்துக் கொள்ளவும். அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்கவும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்து செல்லவும். சிறிய வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொள்வது நல்லது. நினைத்த சில பணிகள் தாமதத்திற்கு பின் நிறைவேறும்.

குரு தன்னுடைய ஒன்பதாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தை பார்ப்பதினால் எதிர்காலம் சார்ந்த எண்ணங்கள் மனதில் மேம்படும். தந்தையின் உடல்நிலையில் கவனம் வேண்டும். சொத்துக்களை வாங்கும் பொழுது வில்லங்கம் ஏதாவது உள்ளதா என்பதை தீர விசாரித்த பின்பு வாங்கவும். மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு சில நேரங்களில் பொறுப்பேற்க வேண்டிய சூழ்நிலைகள் உண்டாகும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும்.
வரவுக்கு ஏற்ற செலவுகளால் பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கங்கள் உண்டாகும். எடுக்கும் சில முயற்சிகளில் விரயங்களுக்கு பின்பு நற்பலன்கள் ஏற்படும். புதிய பொருட்களின் சேர்க்கையினால் கையிருப்புகள் குறையும். ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்க்கவும். எதிர்பாராத தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும்.

உடல் ஆரோக்கியத்தில் அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படும். பழைய சிந்தனைகளின் மூலம் வீண் சஞ்சலங்கள் உண்டாகும். பலதரப்பட்ட அனுபவங்களின் மூலம் எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். மருத்துவ செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும்.


பெண்களுக்கு இறை வழிபாடு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்கள் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். நெருக்கமானவரிடம் கொடுக்கல், வாங்கலை முடிந்த அளவுக்கு தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படலாம்.
:மாணவர்களுக்கு முயற்சிக்கு ஏற்ப மதிப்பெண் கிடைக்கும். கல்வியில் கவனத்துடன் இருப்பது நல்ல மதிப்பெண் பெற வழிவகுக்கும். ஞாபக மறதி மற்றும் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் தேவையற்ற பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். எதிர்பாலின நண்பர்களிடத்தில் கவனம் வேண்டும்.

:உத்தியோக பணிகளில் எதிர்பாராத இடமாற்றங்கள் ஏற்படும். பணி நிமிர்த்தமான அலட்சியங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. கைமாறாக கொடுத்த தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். எளிதில் முடிக்க வேண்டிய சில பணிகள் கூட தாமதமாக முடிப்பீர்கள். பிறரை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்காதீர்கள்.

தொழிலில் போட்டிகள் மேம்படும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் ஓரளவு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான சொந்த ஊர் பயணங்களை அடிக்கடி மேற்கொள்வீர்கள். புதிய முதலீடு தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். கமிஷன் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலம் பிறக்கும். கூட்டாளிகளிடம் சிறு சிறு விவாதங்கள் ஏற்படும்.
கலைத்துறையில் எதிர்பாராத புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்ட தனவரவுகள் கிடைக்கும். உடன் இருப்பவர்களிடம் ரகசியங்கள் பகிர்வதை தவிர்க்கவும். பேச்சுக்களில் நிதானத்தை கடைபிடிப்பது உங்கள் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தும்.
அரசியல்வாதிகள் மக்களின் எண்ணங்களை புரிந்து கொண்டு செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளால் சில நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பாராத சில நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான வதந்திகளால் குழப்பங்கள் உண்டாகும்.
போக குருவினால் கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். எதிர்பார்த்த கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். தவறுகளை திருத்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
போக குருவினால் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும்.

பௌர்ணமி தோறும் குலதெய்வ வழிபாடு செய்து வர இன்னல்கள் குறையும்.ஆதரவற்ற சிறுவர்களுக்கு இனிப்பு பண்டங்களை வாங்கி தருவது மனநிம்மதியை ஏற்படுத்தும்.

மிதுனம் ராசி -குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

மிதுன ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து, ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான
சகோதர ஸ்தானத்தையும ஏழாம் பார்வையாக துலாம் ராசியான
புத்திர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான களத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார். கலகலப்பு நிறைந்த மிதுன ராசி அன்பர்களே!! குரு லாப ஸ்தானத்தில் நிற்பதால் தடைபட்டு வந்த சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்கள் ஆதரவானவர்களை புரிந்து கொள்வீர்கள். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும்.
குரு ஐந்தாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதினால் மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஒத்துழைப்புகள் ஏற்படும். தகவல் தொடர்பு துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள்.

குரு ஏழாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். பொன், பொருள் சேர்க்கை மேம்படும். குரு ஒன்பதாம் பார்வையாக களத்திர ஸ்தானத்தை பார்ப்பதினால் நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். உணவு சார்ந்த துறைகளில் லாபம் ஏற்படும். பழக்கவழக்கங்களில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதாரம்: வருமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வணிகத்தில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். புத்திசாலித்தனமாக செயல்பட்டு சேமிப்பை பயன்படுத்துங்கள்.

உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மன மகிழ்ச்சி அடைவீர்கள். மருத்துவம் தொடர்பான விரயங்கள் குறையும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள்.
பொருளாதாரத்தில் முன்னேற்றமான சூழ்நிலைகள் அமையும். வரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். அசையா சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள்.
மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். நுணுக்கமான சில விஷயங்களை எளிதில் புரிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வத்தை குறைத்துக் கொள்வது நல்லது. விளையாட்டு மற்றும் போட்டிகளில் பங்கு பெற்று பாராட்டுகளை பெறுவீர்கள். அரசு தொடர்பான உதவிகள் கிடைக்கும்.
உத்தியோக பணிகளில் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெறுவீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். புதிய நபர்களின் ஒத்துழைப்புகள் மன நிம்மதியை ஏற்படுத்தும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும்.
வியாபார பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். விவசாய பணிகளில் நவீன கருவிகளை பயன்படுத்தி நன்மை அடைவீர்கள்.
கலைஞர்களுக்கு:

கலை சார்ந்த துறைகளில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் செல்வாக்குகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களுக்கு ஆதரவுகள் கிடைக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். பலதுறை சம்பந்தப்பட்ட புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

அரசியல் துறைகளில் இருப்பவர்களுக்கு எதிர்ப்புகளின் மூலம் ஆதாயமும், செல்வாக்கும் அதிகரிக்கும். தொண்டர்களின் ஆதரவுகளை பெறுவீர்கள். கட்சி தொடர்பாக எதிர்பாராத சில விரயங்கள் இருந்தாலும், அனுகூலம் உண்டாகும். கௌரவமான சில பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

லாப குருவினால் நல்ல முன்னேற்றமும், சிந்தனைகளில் தெளிவும் பிறக்கும். புதிய நபர்களின் அறிமுகமும், எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.கவனம்:

லாப குருவினால் சமூகப் பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்பட்டால் நல்ல மாற்றத்தை உருவாக்க முடியும். ஆடம்பரமான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும்.
ஜென்ம நட்சத்திரத்தன்று திருச்செந்தூரில் உள்ள தமிழ் கடவுள் முருகரை வழிபாடு செய்து வர மேன்மை ஏற்படும்.

பசு மாட்டிற்கு தீவனம் மற்றும் தட்டு கொடுத்து உதவுவதன் மூலம் செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும்.
 

 

கடகம் ராசி -குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

 கடகம் ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு பத்தாம் இடமான தொழில் ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.


குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து, ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான
குடும்ப ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியான சுக ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான சத்ரு ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார். கனிவும், கற்பனை வளமும் கொண்ட கடக ராசி அன்பர்களே!! குரு தொழில் ஸ்தானத்தில் நிற்பதால் வியாபாரம் நிமிர்த்தமான எண்ணங்கள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும்.

குரு ஐந்தாம் பார்வையாக குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் சாதுரியமான பேச்சுக்களால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். குடும்பத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள்.

குரு ஏழாம் பார்வையாக சுக ஸ்தானத்தை பார்ப்பதால் தாய்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். புதிய வீடு மற்றும் வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். பெரியோர்களின் ஒத்துழைப்புகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வங்கி சார்ந்த கடன் உதவிகள் கிடைக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக சத்ரு ஸ்தானத்தை பார்ப்பதால் எதிர்ப்புகளால் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் அவசரப்படாமல் நிதானமாக சிந்தித்து செயல்படவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் ஏற்படும். ஆடம்பரப் பொருட்கள் தொடர்பான விரயங்களை குறைத்துக் கொள்வது நல்லது.
எதிர்பார்த்த வரவுகள் கிடைத்தாலும் அதற்கு ஏற்ப சுப விரயங்களும் ஏற்படும். முதலீடு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெறவும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும்.
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். உணவு சார்ந்த விஷயங்களில் சில மாற்றங்களால் நன்மைகள் அதிகரிக்கும். தந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
சுய தொழில் நிமிர்த்தமான முயற்சிகளில் குறைந்த அளவிலான முதலீடுகள் மேற்கொள்வது நல்லது. பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும். குழந்தைகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் நெருக்கமானவர்களிடம் வருத்தங்கள் நேரிடலாம். மனதிற்குப் பிடித்த விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது.
கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். ஆசிரியர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை உருவாக்கும். மருத்துவம் தொடர்பான விஷயங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் புதிய அனுபவங்கள் ஏற்படும். வெளிநாடு தொடர்பான கல்வி வாய்ப்பு சாதகமாக அமையும்.
வேலை நிமிர்த்தமான முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகளிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பணி நிமிர்த்தமான பயணங்களை அடிக்கடி மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். சக பணியாளர்களை அரவணைத்து செல்வதன் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். நிர்வாகம் தொடர்பான விஷயங்களை அறிந்து செயல்படவும்.
சாதுரியமான செயல்பாடுகளின் மூலம் தொழில் சார்ந்த பிரச்சனைகளை வெற்றிக் கொள்வீர்கள். வேலையாட்களிடம் தட்டிக்கொடுத்து செயல்படவும். புதிய நபர்களை நம்பி அறிமுகம் இல்லா தொழில்களில் இறங்குவதை தவிர்க்கவும். பங்குதாரர்கள் வழியில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும்.
கலை சார்ந்த துறைகளில் உள்ளவர்களுக்கு வித்தியாசமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான போட்டிகளை அறிந்து வெற்றிக் கொள்வீர்கள். நடைமுறை அறிந்து எதார்த்தமான படைப்புகளால் கீர்த்தி பெறுவீர்கள். சில சிந்தனைகளின் மூலம் நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.
புதிய பதவி மற்றும் பொறுப்புகள் சில தாமதங்களுக்குப் பின்பே சாதகமாக அமையும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும். எதிராக செயல்பட்டவர்களுக்கு மாறுபட்ட முறையில் பதிலடி கொடுப்பீர்கள்.
தொழில் ஸ்தானத்தில் நிற்கின்ற குருவினால் குடும்பத்தில் உங்கள் மீதான நம்பிக்கையும், ஆதரவும் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் புதிய மாற்றங்கள் பிறக்கும். மாறுபட்ட அனுபவங்களின் மூலம் மனப்பக்குவம் உண்டாகும்.கவனம்:

தொழில் ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் செய்கின்ற செயல்களிலும், எடுத்துச் செல்லும் உடைமைகளிலும், ஜாமீன் தொடர்பான விஷயங்களிலும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
வியாழக்கிழமைதோறும் தட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும்.

வசதி குறைவாக இருக்கின்ற வயதான ஆசிரிய பெருமக்களுக்கு உதவி செய்து ஆசி பெறுவதன் மூலம் எதிர்பார்த்த சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும்.
 

 சிம்மம் ராசி -குருபெயர்ச்சி பலன்கள் 2023 - 2024

 சிம்ம ராசிக்கு எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் இருந்த குரு பகவான் சித்திரை மாதம் 09ஆம் தேதி (22.04.2023) ராசிக்கு ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்திற்கு சஞ்சாரம் செய்ய இருக்கின்றார்.

குருவானவர் தான் நின்ற ராசியிலிருந்து ஐந்தாம் பார்வையாக சிம்ம ராசியான ராசி ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக துலாம் ராசியான சகோதர ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தனுசு ராசியான
புத்திர ஸ்தானத்தையும் பார்வையிட இருக்கின்றார். விடாமுயற்சி மற்றும் சாதனைகள் பல செய்யும் சிம்ம ராசி அன்பர்களே!! குரு பாக்கிய ஸ்தானத்தில் நிற்பதால் மனதில் புதுவிதமான ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். எதிலும் தற்பெருமை இன்றி செயல்படவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். எண்ணிய பணிகள் எதிர்பார்த்த விதத்தில் நிறைவேறும்.
குரு ஐந்தாம் பார்வையாக ஜென்ம ஸ்தானத்தை பார்ப்பதால் மனதில் நினைத்த சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உணவு விஷயங்களில் கவனத்துடன் இருக்கவும்.

குரு ஏழாம் பார்வையாக சகோதர ஸ்தானத்தை பார்ப்பதால் செய்யும் முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். சகோதரர் வழியில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். புதிய தொழில்நுட்பம் பற்றிய புரிதல் மேம்படும். வித்தியாசமான சில அணுகுமுறைகளின் மூலம் எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

குரு ஒன்பதாம் பார்வையாக புத்திர ஸ்தானத்தை பார்ப்பதால் கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். பொழுதுபோக்கு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும்.
பொருளாதாரம் :

பொருளாதாரத்தில் மேன்மையான நிலைகள் உண்டாகும். புதிய வகை காதணிகளை வாங்கி மகிழ்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் கைகூடும். பழைய இழப்புகளை சரிசெய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். 
 உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். மனதளவில் இருந்துவந்த சில குழப்பங்கள் விலகி தெளிவுகள் உண்டாகும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும்.
வாழ்க்கைத் துணைவர் பற்றிய புரிதல் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ற முன்னேற்றத்தை அடைவீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்து செயல்படவும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள்.
மாணவர்களுக்கு:

மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.
உத்தியோக பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இடையூறுகள் விலகும். ஊதிய உயர்வு சார்ந்த முயற்சிகள் கைகூடும். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான சில விஷயங்களால் விரயங்கள் உண்டாகும்.
கூட்டாளிகளின் ஆதரவுகள் கிடைக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான வியாபாரங்களில் லாபம் ஏற்படும். நுணுக்கமான சிந்தனைகளின் மூலம் போட்டிகளை வெற்றிக் கொள்வீர்கள். வேலையாட்களின் ஆதரவுகள் மேம்படும். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த இழுபறியான நிலைகள் மறையும்.
கலை சார்ந்த துறைகளில் ஏற்படும் விமர்சனங்களை சாதகமாக பயன்படுத்தி முன்னேறுவீர்கள். அரசு வழியில் நன்மைகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். எதிர்பாராத சில திடீர் மாற்றங்களும், வாய்ப்புகளும் உண்டாகும்.
அரசியல்வாதிகளுக்கு வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். எதிர்பாராத கட்சி நிமிர்த்தமான சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். திடீர் பயணங்களால் மறைமுக வருவாயும், ஆதாயமும் கிடைக்கும். மேடைப் பேச்சுக்களில் தகுந்த ஆவணங்களை கொண்டு உரையாடுவது நல்லது.

பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் மனதில் புதிய தெளிவும், செயல்களில் புதிய உத்வேகமும் உண்டாகும்

பாக்கிய ஸ்தானத்தில் இருக்கின்ற குருவினால் எதிலும் தற்பெருமை இன்றியும், மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்தும் செயல்படவும்.
:குலதெய்வத்தை வழிபாடு செய்து வருவதன் மூலம் நினைத்ததை நிறைவேற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் சாதகமாக அமையும்.

மகாலட்சுமியை வழிபாடு செய்து வர முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும்.
 

 

 

Tags :

Share via