போராட்டத்தை நிறுத்தவில்லை - வதந்திகளை பரப்ப வேண்டாம் சாக்ஷி மாலிக்

by Staff / 05-06-2023 04:35:28pm
போராட்டத்தை நிறுத்தவில்லை - வதந்திகளை பரப்ப வேண்டாம் சாக்ஷி மாலிக்

மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை நிறுத்தவில்லை என்று இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் தற்போது தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் நடத்தி வரும் போராட்டத்திலிருந்து சாக்‌ஷி மாலிக் விலகியுள்ளார் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த நிலையில், சாக்‌ஷி மாலிக் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தார் என்று பரவி வரும் பிரச்சாரங்களை மக்கள் நம்ப வேண்டாம் என்று அவர் அறிவித்தார். தனது ரயில்வே பணியில் இணைந்துள்ள சாக்‌ஷி மாலிக், "மல்யுத்த வீரர்கள் தங்கள் பணிகளுக்கு திரும்பியிருந்தாலும் அவர்கள் தங்கள் கடமைகளைச் செய்து கொண்டே போராட்டத்தைத் தொடர்வார்கள்" என்று கூறினார்.

 

Tags :

Share via