ஓடும் ரயிலில் விழுந்து காதலர்கள் தற்கொலை
கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலில் விழுந்து காதல் ஜோடிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்கத்தாவில் உள்ள நோவாபரா மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் வந்து கொண்டிருந்த போது இளம் பெண்ணும் இளைஞனும் திடீரென தண்டவாளத்தில் குதித்தனர். வேகமாக வந்த மெட்ரோ ரயில் இருவர் மீதும் பாய்ந்தது. இந்த சம்பவத்தில் இளம் பெண்ணும், இளைஞனும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்த வீடியோ காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
Tags :