பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை:  அமைச்சர் ராஜகண்ணப்பன்

by Editor / 13-05-2021 07:03:51pm
பேருந்துகளில் ஆக்சிஜன் படுக்கை:  அமைச்சர் ராஜகண்ணப்பன்



தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நிர்பயா திட்டத்தின் கீழ் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பேருந்துகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தப்படும். சென்னையில் 1,400 பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு, பல வழித்தடங்களில் விரைவில் விரிவுப்படுத்தப்படும்.பேருந்து வழித்தடங்களை எளிதில் அறிந்து கொள்ள சலோ ஆப் செயலியை விரைந்து செயல்படுத்த வேண்டும். ஆக்சிஜன் இருப்பு நிலையை பொருத்து, பேருந்துகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளாக மாற்றி சிகிச்சையளிக்க திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பாக சுகாதாரத்துறையினரிடம் பேசி முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். பேருந்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டம் முதன்முதலில் டில்லியில் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via