குழந்தையை 10 ஆயிரத்திற்கு விற்ற பெண்

by Staff / 19-12-2023 04:25:24pm
குழந்தையை 10 ஆயிரத்திற்கு விற்ற பெண்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா அத்தியூர் கிராமத்தை சேர்ந்த சரவணன் மாவட்ட ஆட்சியர் குறைதீர் கூட்டத்தில் குடுத்த மனுவில், தனது மனைவி திவ்யா, தினேஷ் என்பவருடன் தொடர்பில் இருப்பதாகவும், பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தையை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டு சென்றுள்ளதாக கூறியுள்ளார். மேலும் அந்த குழந்தையை வி.களத்தூரை சேர்ந்த ஒரு நபரிடம் ரூ.10 ஆயிரத்துக்கு விற்றுள்ளதாக கூறியுள்ளார். பின்னர் தினேஷ் மீண்டும் தனது வீட்டிற்கு வந்து மற்ற இரண்டு குழந்தைகளையும் கடத்தி சென்றுவிட்டார் எனவும், குழந்தையை மீட்டு தரும்படி அந்த மனுவில் கூறியுள்ளார்.

 

Tags :

Share via