அவன் இவன் பட விவகாரத்தில் இயக்குனர் பாலா விடுதலை

அவன் இவன் திரை படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை தவறாக சித்தரித்து திரைப்படம் வெளியானதாக தொடரப்பட்ட அவதூறு வழக்கிலிருந்து இயக்குனர் பாலாவை விடுதலை செய்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் நடித்து வெளியான அவன் இவன் திரைப்படத்தில் நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சொரிமுத்தையனார் கோவில் மற்றும் சிங்கம்பட்டி சமஸ்தானத்தை அவதூறாக சித்தரித்து கருத்துக்கள் வெளியானதாக கூறி சிங்கம்பட்டி இளைய ஜமீன்தார் சங்கராத்மஜன் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்தில் வெளியானது.
இயக்குனர் பாலா தரப்பில் வழக்கறிஞர் முகமது உசேன் ஆஜராகி திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும் சொரிமுத்தையனார் குறித்தும் எந்த தவறான கருத்துக்களும் பதிவு செய்யப்படவில்லை என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார் இந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி கார்த்திகேயன் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த பின்னர் மனுமதாரர் குற்றத்தை முறையாக ஆதாரத்துடன் நிரூபணம் செய்யப்படாததால் இயக்குனர் பாலாவை இந்த வழக்கிலிருந்து விடுவிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சிங்கம்பட்டி ஜமீன் தரப்பு வழக்கறிஞர் ரமேஷ் நீதிமன்ற ஆவணங்களை பெற்று கலந்தாலோசனை செய்து மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறினார் .
Tags :