மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வருக்கு நோட்டீஸ்

by Staff / 31-10-2023 05:24:02pm
மதுபான ஊழல் வழக்கில் டெல்லி முதல்வருக்கு நோட்டீஸ்

டெல்லி மதுபான முறைகேடு வழக்கில் பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்க இயக்குநரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. நவம்பர் 2ஆம் தேதி அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் அவர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக ஆம் ஆத்மி அமைச்சர் அதிஷி மர்லினா தெரிவித்திருந்தார். எதிர்க்கட்சிகளின் பல தலைவர்கள் பாஜகவால் குறிவைக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via