மத்திய அரசு நாளை முதல் உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்புகளைத் திரும்பப் பெற்றுள்ளது.
மத்திய அரசு, மார்ச் 23, 2026 முதல் உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்புகளைத் திரும்பப் பெற்றுள்ளது. சீரான செயல்பாட்டு காலத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மத்திய கிழக்கு நெருக்கடியால் விமான நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வை சந்தித்து வரும் வேளையில் இது வந்துள்ளது .மத்திய அரசின் இந்த முடிவு விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய மாற்றமாகும். இதன் மூலம் விமான நிறுவனங்கள் சந்தை நிலவரத்திற்கு ஏற்ப தன்னிச்சையாகக் கட்டணங்களை நிர்ணயம் செய்ய முடியும்.எரிபொருள் விலைஉயர்வு மற்றும் செயல்பாட்டுச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, விமான நிறுவனங்கள் இனி தங்களுக்குத் தேவையான லாபகரமான விலையை நிர்ணயிக்கும்.விமான நிறுவனங்களுக்குச் சுதந்திரம் கிடைத்துள்ளதால், இனி வரும் காலங்களில் குறிப்பாக பண்டிகைக் காலங்கள் மற்றும் அதிகத் தேவையுள்ள நேரங்களில் விமானக் கட்டணங்கள் அதிகரிக்கக் கூடும்அதே சமயம், நிறுவனங்களுக்கு இடையேயான போட்டி காரணமாக சில வழித்தடங்களில் சலுகை விலைகளும் கிடைக்க வாய்ப்புள்ளது.மத்திய கிழக்கு பதற்றத்தால் எரிபொருள் விலை ஏற்கனவே உயர்ந்து வரும் நிலையில், இந்த உச்சவரம்பு நீக்கம் விமான நிறுவனங்களுக்குச் சற்று நிம்மதியை அளித்தாலும், சாதாரணப் பயணிகளுக்கு இது கூடுதல் சுமையாக மாற வாய்ப்புள்ளது.கடந்த டிசம்பர் 2025-ல் இண்டிகோ விமான நிறுவனத்தின் பெரும் விமான ரத்து நடவடிக்கைகளால் ஏற்பட்ட கட்டண உயர்வைக் கட்டுப்படுத்த அரசு இந்த உச்சவரம்பை விதித்திருந்தது.
Tags :



















