சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவிலில் ஆடித்தபசு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
தென்காசி மாவட்டம் இன்று ஆடி தவசு முன்னிட்டு சங்கரன்கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மேலும் பொது மக்களுக்கு எந்தவிதமான இடையூறுகள் இல்லாதபடி காவல்துறையினர் முழுமையான பாதுகாப்புபணியில் ஈடுபட்டுள்ளனர்.தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் 4 ஏடிஎஸ்பிக்கள்,9 டிஎஸ்பிக்கள் உள்ளிட்ட ஆயிரம் போலீசார் பாதுகாப்புபணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.மேலும் ஆடித்தபசு திருவிழாவைக்காண லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிய இருப்பதால் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியாக இடங்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் அமர்த்தப்பட்டுள்ளனர்
Tags : சங்கரன்கோவில் சங்கரநாராயணன் திருக்கோவிலில் ஆடித்தபசு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்