2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

by Staff / 14-09-2023 01:33:47pm
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை

தமிழக அரசின் நீர்வளத்துறையின் சார்பில் ஆன்லைன் முன்பதிவு மூலம் விற்பனை செய்யப்படும் ஆற்று மணல் விற்பனையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இதையடுத்து, நேற்று முன்தினம் புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், வேலூர், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் 25-க்கும் மேற்பட்ட இடங்களில், மணல் குவாரி, சேமிப்பு கிடங்கு அதிபர்கள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via