ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 22ஆம் தேதி தொடக்கம்

by Staff / 18-05-2024 12:18:29pm
ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி 22ஆம் தேதி தொடக்கம்

ஏற்காடு கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி வரும் 22ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு நடைபெற உள்ளது. நீலகிரியில் கோடை விழா வரும் 20ஆம் தேதியுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வருகிற 22ஆம் தேதி கோடை விழா தொடங்குகிறது. அதனுடன் மலர் கண்காட்சியும் 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலா மற்றும் தோட்டக்கலைத்துறை செய்து வருகிறது.

 

Tags :

Share via

More stories