லிங்குசாமியின் 6 மாத சிறை தண்டனை நிறுத்திவைப்பு
படத்தயாரிப்புக்காக பி.வி.பி. கேப்பிடல் நிறுவனத்திடம், ரூ.1.03 கோடியை இயக்குனர் லிங்குசாமி, அவரது சகோதரர் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோர் கடனாக பெற்றுள்ளனர். இதற்காக லிங்குசாமி கொடுத்த ரூ.1.35 கோடிக்கான காசோலை வங்கியில் பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து பி.வி.பி கேப்பிடல் நிறுவனம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் லிங்குசாமி மற்றும் அவரது சகோதரருக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் லிங்குசாமி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் இருவரின் தண்டனையையும் நிறுத்திவைக்க உத்தரவிட்டு, ரூ.1.35 கோடியை செலுத்த 6 வாரங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.
Tags :