புயல் எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் புயல் உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் 7ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இந்நிலையில், சற்றுமுன் வெளியான தகவலின் படி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இது வலுவடைந்து, வடக்கில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், புயலின் தன்மை, நகர்வு திசை உள்ளிட்டவை தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :