அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே நோக்கம்-ஓபிஎஸ் ,தினகரன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி.

by Editor / 08-05-2023 09:19:13pm
அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே நோக்கம்-ஓபிஎஸ் ,தினகரன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி.

டிடிவி தினகரன் இல்லத்திற்கு சென்று அவரை நேரில் சந்தித்தார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். 
தமிழக அரசியலில் எப்போது இவர்கள் இணைவார்கள்  என்ற கேள்வியும்..எப்போது சந்திப்பு நடக்கும் என்ற எதிர்பார்ப்பும்..இருந்துவந்த நிலையில் டிடிவி தினகரனின் அடையாறு இல்லத்தில் நடைபெற்ற  ஓபிஎஸ்- டிடிவி தினகரன் சந்திப்பு அரசியலில் ஒரு புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வண்ணம் அமைந்துள்ளது.இன்று நடைபெற்ற தினகரன்-ஒபி.எஸ்.சந்திப்பில், இணைந்து செயல்படுவது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்தச்சந்திப்பின் பொது பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார். இறுதியாக சசிகலாவுக்கு எதிராக 2017 ஆம் ஆண்டு பிப்ரவரியில் தர்மயுத்தம் தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், அதே ஆண்டு ஜூலையில் டிடிவி தினகரனை சந்தித்து பேசினார். ஜெயலலிதா மறைவுக்கு பின் கடந்த நான்கு ஆண்டுகளாக இரட்டை தலைமையாக அதிமுக இயங்கி வந்தது.

சமீபத்தில் ஒற்றை தலைமை தொடர்பாக அதிமுகவில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் ஓ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவருக்குமான மோதல் இந்திய தேர்தல் ஆணையம், நீதிமன்றம் என பரந்து  விரிந்து வலுத்து வருகிறது. இதனிடையே சசிகலா, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட போவதாக ஓ.பன்னீசெல்வம் கூறிவருகிறார், இந்த சூழலில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடதக்கது.விரைவில் சின்னம்மாவை பார்ப்பேன் என்றும்  இருவரும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்""அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு"
அதிமுகவை காப்பாற்ற இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்.சசிகலா வெளியூரில் இருப்பதால் ஊருக்கு வந்தவுடன் அவரையும் சந்திக்க உள்ளேன்.தொண்டர்கள், மக்களை மனதில் வைத்துக் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது- ஓபிஎஸ்ஓ.பன்னீசெல்வம் தெரிவித்துள்ளார்.மேலும் சில காரணங்களால் பிரிந்திருந்தோம் உண்மையான அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே நோக்கம் என ஓபிஎஸ் ,தினகரன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி.
 

அதிமுக தொண்டர்கள் கையில் கட்சியை ஒப்படைப்பதே நோக்கம்-ஓபிஎஸ் ,தினகரன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி.
 

Tags :

Share via