தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராயத்திற்கு மூல காரணமாக இருந்த மெத்தனால் வியாபாரி கைது

by Admin / 17-05-2023 12:14:51pm
தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராயத்திற்கு மூல காரணமாக இருந்த மெத்தனால் வியாபாரி கைது

தமிழகத்தை உலுக்கிய கள்ளச்சாராயத்திற்கு மூல காரணமாக இருந்த மெத்தனால் வியாபாரியும் கெமிக்கல் பொறியியல் பட்டதாரிமான ஒருவர் நேற்று இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .அண்மையில் விழுப்புரம்- செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராய பருகிய 22 பேரை காவு வாங்கிய விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை தோற்றுவித்திருக்கின்ற நிலையில் ,அதற்கு காரணமான- உடந்தையாக இருந்தவர்களை அரசு கைது செய்து வருகின்ற நிலையில் ஸ்ரீ விநாயகா எண்டர்பிரைசஸ் என்கிற மெத்தனால் விற்பனை செய்யக்கூடிய நிறுவனத்தை நடத்தி வைத்த கருவூரை சேர்ந்த பட்டதாரி  இளைய நம்பி கைது செய்யப்பட்டுள்ளார்.  கடலூரில்   இவர்   செய்து வந்த தொழிலில் பெரும் நஷ்டம் அடைந்ததால் , சென்னை மதுரா வயலுக்கு வந்து அவர் இந்த மெத்தனால் தயாரிக்கும்  பணியில் ஈடுபடுவதற்காக  ஸ்ரீ விநாயகா எண்டர்பிரைசஸ் என்கிற  நிறுவனத்தை  ஆரம்பித்து  மணலி மற்றும்  கும்முடி பூண்டி பகுதிகளில்  உள்ள  கெமிக்கல் தொழிற்சாலைகளில்  இருந்து கெமிக்கல்களை வாங்கி வந்து மெத்தனால் தயாரித்து உள்ளதும் அதை கள்ளச்சாராயம்  காய்ச்சும்  வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வந்ததும் காவல்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. விழுப்புர கள்ளச்சாராய  வியாபாரிக்கு 1200 லிட்டர் மெத்தனாலை இவர் இந்த மாதம் விற்பனை செய்து உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via