குண்டுவெடிப்பில் 12 பேர் பரிதாப பலி

by Staff / 01-12-2022 11:21:34am
குண்டுவெடிப்பில் 12 பேர் பரிதாப பலி

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு வன்முறைகள் அடிக்கடி நடந்த வண்ணம் உள்ளன. தற்கொலைத் தாக்குதல்களால் தேசமே நடுங்குகிறது. இளைஞர்களை மட்டுமே குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்படுகிறது. சமீபத்தில், ஐபக் நகரில் உள்ள மதரஸாவில் புதன்கிழமை ஏற்பட்ட வெடிவிபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். பலர் பலத்த காயம் அடைந்தனர். உள்ளூர் வைத்தியர் ஒருவர் ஊடகங்களுக்கு இதனைத் தெரிவித்தார். தங்களுடைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தவர்களில் பெரும்பாலானோர் இளைஞர்கள் என்று தெரிவித்தனர். மதரஸாவில் குண்டு வெடிப்பு நடந்ததை மாகாண அதிகாரியும் உறுதிப்படுத்தினார். இந்த தாக்குதல்களை நடத்தியது யார் என்பது இதுவரை தெரியவில்லை.

 

Tags :

Share via