மணிப்பூருக்கு கூடுதலாக படைகளை அனுப்ப திட்டம்

by Staff / 26-06-2023 05:42:34pm
மணிப்பூருக்கு கூடுதலாக படைகளை அனுப்ப திட்டம் மணிப்பூர் மாநிலத்திற்கு கூடுதலாக துணை ராணுவ படைகளை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. மணிப்பூர் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்திய நிலையில் மணிபூர்க்கு கூடுதலாக துணை ராணுவ படைகளை அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஜூன் 13ஆம் தேதிக்குப் பிறகு மணிப்பூரில் வன்முறை காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். இதனை தொடர்ந்து மணிப்பூரில் இயல்பு நிலை திரும்ப மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று உள்துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
 

Tags :

Share via