உயிரை பறித்த ஆட்டு இறைச்சி

by Staff / 15-03-2023 12:33:08pm
 உயிரை பறித்த ஆட்டு இறைச்சி

ஆட்டு இறைச்சி சாப்பிட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் ஆந்திர மாநிலம் அல்லூரி மாவட்டத்தில் நடந்துள்ளது. அரக்கு கன்னேலா கிராமத்தில் ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 பேர் கடுமையாக நோய் வாய்ப்பட்டனர். கிராம மக்கள் அனைவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், ஆனால் மீனாட்சி என்ற ஐந்து வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மருத்துவதுறையினரும், காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆட்டு இறைச்சியால் சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via