ருத்ரதாண்டவம் படம் பார்க்க தடையை மீறி  ஊர்வலம் : பா.ம.க ,ம் வன்னியர் சங்கம் மீது வழக்கு

by Editor / 01-10-2021 07:46:53pm
ருத்ரதாண்டவம் படம் பார்க்க தடையை மீறி  ஊர்வலம் : பா.ம.க ,ம் வன்னியர் சங்கம் மீது வழக்கு

தருமபுரி நகரில் ருத்தரதாண்டவம் படம் பார்க்க கொரோனா தடையை மீறி ஊர்வலமாக சென்று ரகளையில் ஈடுப்பட்ட பாமக மற்றும் வன்னியர் சங்கத்தினர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


தருமபுரியில்  இரண்டு திரையரங்குளில் ருத்தர தாண்டவம் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்க்க பாமக மற்றும் வன்னியர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் பெரியார் சிலையிலிருந்து திரையரங்கிற்கு கொரோனா 144 தடை உத்திரவு அமலில் உள்ள நிலையில், அனுதியின்றி மேளத்தாளத்துடன் குத்தாட்டம் போட்டுக்கொண்டு போக்குவரத்துக்கு இடையூராக ரகளையில் ஈடுப்பட்டு ஊர்வலமாக சென்றனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த ஊர்வலத்தை தடுத்த போது, காவலர் ஒருவரைகூட்டத்தினர் சுற்றி வளைத்து தள்ளினர். 


இதனையடுத்து அங்கு சைரன் ஓசையுடன் வந்த காவல் வாகனத்தை கண்டதும் ஊர்வலமாக வந்த இளைஞர்கள் அங்கும் இங்கும் தெறித்து ஓடினர். அதனையடுத்து ரகளையில் ஈடுப்பட்ட இளைர்கள் மற்றும் அனுமதியின்றி ஊர்வலமாக சென்றவர்கள் என 5 பேரை பிடித்து கைது செய்தனர். மேலும் அனுதியின்றி ஊர்வலமாக சென்ற 100 க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய பெயர் மற்றும் விலாசங்களை காவல்துறையினர் சேகரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via