3 புதிய ஆளுநர்கள் நியமனம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவு

ஹரியானா, கோவா மற்றும் லடாக் யூனியன் பிரதேசத்திற்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். லடாக் யூனியன் பிரதேச துணை நிலை ஆளுநர் பி.டி.மிஸ்ராவின் ராஜினாமா ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, புதிய துணை நிலை ஆளுநராக கவிந்தர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், ஹரியானா மாநில ஆளுநராக அசிம் குமார் கோஷிம், கோவா மாநில ஆளுநராக அசோக் கஜபதி ராஜு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
Tags :