அஜித்குமார் கொலை வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் விசாரணையில் தாக்கப்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கை தமிழக அரசு சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதையடுத்து அஜித்குமார் வழக்கு விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தற்போது தொடங்கியுள்ளனர். அஜித்குமாரை கோசாலையில் வைத்து அடித்த இடத்தில் இருந்து விசாரணை தொடங்கியது. மடப்புரம் கோயில் உதவி ஆணையர் அலுவலகத்திலும் விசாரணை நடக்கிறது.
Tags :



















